ஜனாதிபதி மாளிகையை 40 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

Published By: Raam

11 Jun, 2016 | 03:33 PM
image

ஜனாதிபதி மாளிகையை இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.  குறிப்பாக இன்று மாத்திரம் 15 ஆயிரத்துக்கும்  அதிகமானோர் வருகை தந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையானது வரலாற்றில் முதற் தடவையாக கடந்த 8 ஆம் திகதி முதல் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

மூன்றாவது நாளாகிய இன்று பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும்  அதிகமானவர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும், இதுவரை 40 ஆயிரம் நாடளாவிய ரீதியில் இருந்து வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையானது 29 ஆளுனர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் தமது அலுவலக பணிகளுக்காகவும் தங்களின் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு வரலாற்று சான்றுகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள், முன்னாள் ஆளுனர்களினதும் ஜனாதிபதிகளினதும் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள்  ஜுன் 14 திகதி மாலை 7 மணிவரை ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06