(ஆர்.யசி)
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் அடுத்த மாதம் 18ஆம் ,19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை கடந்த வாரம் மத்திய வங்கியினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட போதிலும் சபாநாயகர் தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிக்காது இருந்தார்.
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்சியாக இது குறித்த கேள்வியை எழுப்பிய நிலையில் கணக்காய்வு அறிக்கையில் இணைப்புகள் இல்லாத அறிக்கையை சபைப்படுத்திய நிலையில் அது குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தடயவியல் கணக்கறிக்கையின் ஆங்கில பிரதி உள்ள நிலையில் தமிழ் மற்றும் சிங்கள பிரதிகளை கேட்டுள்ள நிலையில் அதனை விவாதத்திற்கு முதல் சபையில் சமர்ப்பிக்கவும் எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஆங்கில பிரதிகளை சபைப்படுத்தவும் சபாநாயகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 18ஆம்,19ஆம் திகதிகளில் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM