பொலிஸாரின் பிடியிலிருந்து தப்ப முயன்ற சந்தேகநபரால் விபத்துச் சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.
இந்நிலையில், கைவிலங்கிடப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அத்துடன், மோட்டார் சைக்கிள் வீதியில்சென்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி காயமடைந்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தரும், சந்தேகநபரும் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சந்தேகநபரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM