(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பு பேரவையின் சுயாதீனத்தன்மை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆகவே பேரவையினால் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கம் அரசாங்கம் ஸ்தாபித்த அரசியலமைப்பு பேரவையின் சுயாதீனத்தன்மை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. இப்பேரவையினால் வழங்கப்பட்ட முக்கிய நியமனங்கள் அனைத்தும் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
சட்டமாதிபர் தப்புலடி லிவேராவின் செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியன. சட்டமாதிபர் பதியின் பொறுப்புகளுக்கு அப்பாற் சென்று இவர் செயற்படுகின்றார்.
வழக்குகள்தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெளிவுப்படுத்துவதே பிரதான பொறுப்பாகும். ஆனால் இவரது செயற்பாடுகள் இன்று மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளன.
தேசிய பொருளாதாரத்திற்கு சவால் விடுத்த மீள்ஏற்றுமதிகள் அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. இதன் உச்சக்கட்ட பலனை இன்று தேசிய உற்பத்தியாளர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைகளை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM