மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறு மதியான வல்லப் பட்டைகளுடன் இரு சந்தேகநபர்களை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீர சிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கங்காபதி ஆர்த்தனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பகுதிக்குச் சென்று இரு சந்தேகநபர்களை கைது செய்ததோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான 70 கிலோ வல்லப்பட்டையினை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 21 மற்றும் 60 வயதுடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வல்லப்பட்டை பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM