சீனாவிலிருந்து வரும் மாணவர்களை தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்க நடவடிக்கை

Published By: Digital Desk 3

28 Jan, 2020 | 01:34 PM
image

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வருகை தரும் அனைத்து  இலங்கை மாணவர்களையம் தியத்தலாவையிலுள்ள இராணுவ முகாமில் இரண்டு வாரங்கள் தங்கவைத்து கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் தாக்கத்தால் முதன்முதலில் அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகர் உள்ளிட்ட சீனாவின் 15 நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும் அந்த நகரங்களுக்கு ஏனையோர் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சீன அரசாங்கம் தனிமைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தை சீன அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளார்கள்.

நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ள குறித்த மாணவர்களையே தியத்தலாவையிலுள்ள இராணுவ முகாமில் இரண்டு வாரங்கள் தங்கவைத்து கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50