திருகோணமலை தனியார் பஸ் நிலையத்தில் நேரக்காப்பாளரைத் தாக்கி காயப்படுத்திய நால்வரை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டார்.
திருகோணமலை மகாமாயபுர பகுதியைச் சேர்ந்த 39,48,31 மற்றும் 21 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கடமையிலிருந்த நேரக்காப்பாளரை மது போதையில் தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகநபர்களுக் கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தாக்குதலுக்குள்ளான நேரம் கண்காணிப்பாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM