சீனாவில் இருந்து 204 இலங்கை மாணவர்கள் வெளியேறினர்! 

Published By: R. Kalaichelvan

28 Jan, 2020 | 08:43 AM
image

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்தோடு குறித்த மாணவர்களை நான்கு விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்தோடு சீனாவில் கல்வி பயின்ற இலங்கை மாணவர்கள் பலர் தற்போது இலங்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் 50 மாணவர்கள் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்ததாக விமான நிலைய சுகாதார வைத்தியப்பிரிவின் வைத்தியர் சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்தார்

மாணவர்களுடனான முதலாவது விமானம் மாலை 5.54க்கும் இரண்டாவது விமானம் 6.34க்கும் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. 

இவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் இவர்கள் வீடு திரும்பிதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை சீனாவிலிருந்து அழைத்துவருவதில் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, சீனாவுக்கான இலங்கைத் தூதரகம், ஸ்ரீ லங்கன் விமானசேவை ஆகிய நிறுவனங்கள் பங்களித்துள்ளன.

சிச்சுவான் மாகாணத்திலும் ஏனைய இடங்களிலும் உள்ள இலங்கை மாணவர்களை விமான நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சீனாவிலிருந்து வரும் இந்த மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இவ்வாறு வரும் மாணவர்கள் குறைந்தபட்சம் 20 நாட்கள் பாதுகாப்பான முகமூடியை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக தற்போது வரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த பிரதேசத்தில் உள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08