(ஆர்.விதுஷா)
ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதி எங்கு செல்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன மேலும் கூறியதாவது,
நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் , நாட்லுள்ள அனைவருக்கும் போதுமான வேலைவாய்ப்பை எவ்வாறு பிரித்து வழங்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
அந்த வகையில் ஒரு கிராம சேவகர் பிரிவிலிருந்து ஐவரையே தெரிவு செய்ய கூடியதாகவிருக்கும். ஆயினும் ஒரு பிரிவிற்கு மாத்திரம் ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் வரையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , அதற்காக 200 ருபாய் கட்டணமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM