கொழும்பின் சில பிரதேசங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 25கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை பொரளை பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 50 வயதான சந்தேகநபர் பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் வசிப்பவராவார்.
சந்தேகநபர் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாளிகாகந்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை
மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 2 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயினுடன் 40 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கல்கிசை
கல்கிசை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை குறித்த பிரதேசத்திலேயே ஹெரோயினுடன் 49 வயதான பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 15 கிராம் 110 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM