தனது தந்தையுடன் மல்யுத்த விளையாட்டு விளையாடுவதில் ஈடுபட்ட 4 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையின் காற்சட்டைப் பையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க இன்டியானா மாநிலத்திலுள்ள புளூமிங்டன் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியாகியுள்ளன. விளையாட்டின் போது தவறுதலாக இயங்கிய துப்பாக்கியிலிருந்து பாய்ந்த ரவை மகனான றிப்ஷோ மற்றும் தந்தையான ரைலர் ஆகிய இருவரது தலைப் பகுதியையும் தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மகனும் தந்தையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்நிலையில் மகன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்ததாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் புளூமிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையின் உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM