7 ஆவது மாடியிலிருந்து தவறுதலாக விழுந்த 76 வயதுப் பெண்ணொருவர் கீழே கரட்டுகள், வெங்காயங்கள், தேசிக்காய்கள் மற்றும் பழங்கள் உள்ளடங்கலானவை நிறைந்திருந்த கூடைகள் மீது விழுந்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள மான்ஹெட்டன் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியாகியுள்ளன.
அண்மையில் முள்ளந்தண்டு சத்திரசிகிச்சை செய்துகொண்ட பார்பரா ஹெல்லர் என்ற மேற்படி பெண் நடப்பதில் சிரமத்தை எதிர்கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவ தினம் பகல் அவர் காற்றோட்டத்திற்காக 7 ஆவது மாடியிலிருந்த தனது வீட்டின் ஜன்னலை நோக்கிச் சென்ற போது கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.
அச்சமயம் அவரது மாடிக்கு கீழே வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மரக்கறிக்கூடைகளை இறக்கும் நடவடிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபட் டுக்கொண்டிருந்ததாகவும் இந்நிலையில் மாடியிலிருந்து விழுந்த அந்தப் பெண் மரக்கறிக் கூடைகளின் மீது விழுந்ததால் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் இடுப்பு எலும்பில் முறிவும் நுரையீரலில் காயமும் சில சிராய்க்புக் காயங்களும் ஏற்பட்டிருந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கனவே உயிராபத்தான நுரையீரல் நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது நண்பியான கெல்லி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM