மாற்று அணி கூட்­ட­மைப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது, தமிழ் மக்­களின் ஒற்­று­மையை பிள­வு­ப­டுத்தும்: சுமந்­திரன்

Published By: J.G.Stephan

27 Jan, 2020 | 11:24 AM
image

மாற்று அணி என கூறு­ப­வர்கள் முற்று முழு­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தோற்கப் பண்ணி அவர்கள் தனி­யாக ஒரு­ப­ல­மான சக்­தி­யாக வரு­வார்கள் என்று அவர்கள் கூட எதிர்­பார்க்க மாட்­டார்கள் என தெரி­வித்­துள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் இது கூட்­ட­மைப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது மாறாக தமிழ் மக்­களின் ஒற்­று­மையை மிக மோச­மாக பிள­வு­ப­டுத்தும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

சம­கால அர­சி­யல்­ நிலை­மைகள் தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இவ்­வி­டயம் குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கூட்­ட­மைப்­புக்குள் இப்­போது எந்தப் பிரச்­ச­ினையும் இல்லை. நாங்கள் எல்­லா­வற்­றையும் சுமு­க­மாகத் தான் பேசித் தீர்த்துக் கொண்டு வரு­கிறோம். தேர்தல் சம்­பந்­த­மாக கூட சுமு­க­மான தீர்­வுகள் ஏற்­பட்­டுள்­ளன. எதிலும் எந்­த­வித பிரச்­சி­னையும் இருக்­க­வில்லை.

இதில் முத­லா­வது விடயம், கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டையில் எந்­த­வி­த­மான குழப்­பமும் இல்லை.எவ­ருமே கூட்­ட­மைப்பிலிருந்து வில­கு­வ­தாக சொன்­னதும் கிடை­யாது.

ஆகவே, கூட்­ட­மைப்பு ஒழுங்­காக எந்த­வித குழப்­பமும் இல்­லாமல் தேர்­தலை எதிர்கொள்ளத் தயா­ராக இருக்­கி­றது. தேர்தலில் இதற்கு முன்னர் மக்­க­ளி­டத்தே எங்­க­ளுக்கு கிடைத்த ஆணையை விட சிறப்­பான ஆணையை பெறுவோம் என்ற ரீதியில் நாங்கள் செயற்­ப­டு­கின்றோம்.

மேலும், ஒற்­று­மைக்­கான அழைப்­பொன்றை நாங்கள் விடுத்­தி­ருந்தோம். ஆனால் அந்த ஒற்­று­மைக்­கான அழைப்பை அல்­லது ஒற்­று­மையை விரும்­பாமல் ஏன் நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்ற­தென்றால், அதனை நிரா­க­ரிப்­ப­வர்கள் தான் அதற்கு பதி­ல­ளிக்க வேண்டும். நான் அவர்­க­ளி­டத்தே விடுத்த அழைப்­புக்கு பிர­தா­ன­மான காரணம் தமிழ்த் தரப்­புகள் ஒன்­றாக பல­மாக நிற்க வேண்டும். தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பும் அப்­ப­டி­யான ஒற்­று­மை­யாக இருக்க வேண்­டு­மென்று தான்.

உண்­மையில் ஒற்­று­மை­யொன்று ஏற்­பட வேண்­டு­மாக இருந்தால் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்­கின்ற கட்­சி­க­ளுக்குள் பிர­தா­ன­மாக இருக்­கின்ற கட்­சி­யோடு மற்­ற­வர்கள் சேர்­வது தான் சாத்­தி­ய­மா­னது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தான் அந்தப் பிர­தா­ன­மான கட்சி. அதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­து­க­ளையும் அவர்கள் சொல்ல முடியாது.

அதிலே வந்து சேரு­மாறு நான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் அவர்கள் அனை­வரும் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­க­னவே இருந்­த­வர்கள். ஆகை­யினால் அந்தக் கட்­சிக்கு அவர்கள் திரும்பி வரு­வதில் எந்த­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்லை. ஆனால் அவர்கள் வெவ்­வேறு கார­ணங்­க­ளுக்­காக பிரிந்து போன­வர்கள். அந்தக் கார­ணங்­களை மக்கள் ஏற்றுக் கொள்­ள­ மாட்­டார்கள் என்­ப­தற்­காக அவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் இப்­போது ஒவ்­வொரு நொண்டிச் சாட்டை சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மேலும் மாற்று அணி எங்­க­ளுக்கு தேவை­யில்லை. அது வரக் கூடாது. அதுவும் விசே­டமாக முன்னாள் முத­ல­மைச்சர் தலை­மையில் வந்தால் அது படு பாத­க­மா­னது. ஆனாலும் அது அவரின் வேலை­யாக இருக்­கலாம். அவர் உரு­வாக்க விரும்­பினால் உரு­வாக்­கட்டும். ஆனால் பாதிக்­கப்­படப் போவது தமிழ் மக்கள் தான். கூட்­ட­மைப்­புக்கு அது தாக்­கத்தை செலுத்­தாது. ஆனால் மக்கள் மத்­தியில் சிறு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும்.

மேலும் மாற்று அணி உரு­வாக்­கு­வ­தாக இருந்தால் அது தமிழ் மக்­களின் ஒற்­று­மையை மிக மோச­மாக பிள­வு­ப­டுத்­து­கின்ற ஒரு நோக்கு. அந்த மாற்று அணி எதுவாக இருந்தாலும் முற்றுமுழுதாக கூட்டமைப்பை தோற்கப் பண்ணி அவர்கள் தனியாக ஒருபலமான சக்தியாக வருவார்கள் என்று அவர்கள் கூட எதிர்பார்க்க மாட்டார்கள். ஆகையினாலே ஒரு மாற்று அணியை உருவாக்குகின்ற செயலை இந்த நேரத்திலே செய்வது தமிழ் மக்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற மாபெரும் சதி என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38