(ரொபட் அன்டனி)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இந்தக்கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.
43ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அவதானிப்பு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் முன்வைக்கவுள்ள நிலையில் இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் மேற்கொண்ட சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளரின் அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.
இம்முறை 43 ஆவது கூட்டத் தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவமிக்கதாக உள்ளது. காரணம் 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் இணை அனுசரணையுடன்30/1 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017ஆம் ஆண்டு 34/1 என்ற பெயருடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்ட பிரேரணை இவ்வருடம் மார்ச் மாதம் மேலும் இரண்டு வருடங்களுக்காக 40/1 என்ற பெயரில் நீடிக்கப்பட்டது.
இந்த பிரேரணை கடந்த ஒருவருடகாலத்தில் அல்லது கடந்த நான்கு வருடகாலத்தில் எவ்வாறு அமுலாக்கப்பட்டது என்பது தொடர்பாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இந்தக் கூட்டத் தொடரில் தமது இலங்கை குறித்த அவதானிப்பு அறிக்கையை முன்வைக்க இருக்கிறார். இதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச தூதுக்குழு
இம்முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் பல்வேறு தரப்பினர் பங்கேற்கவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அல்லது மனித உரிமை தொடர்பான அமைச்சர் தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழுவினர் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இலங்கைத் தூதுக்குழுவினர் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையாளரையும் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் தூதுவர்களையும் அரச தரப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
தமிழர் தரப்பு
இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவொன்றும் சட்டத்தரணிகளும் இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் பொறுப்புக்கூறல் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிப்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரையும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழ் தரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
அத்துடன் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்தக்கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றவுள்ளன. குறிப்பாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை போன்ற மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் உரையாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்த 30-1 என்ற பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதாவது 2017 ஆம் ஆண்டாகும்போது இந்த பிரேரணையை நிறைவேற்றவேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
எனினும் அக்காலப்பகுதியில் பிரேரணை முழுமையாக நிறைவேறாததன் காரணமாக 2017 ஆம் ஆண்டு 30-1 என்ற பிரேரணை மேலும் இரண்டு வருடங்களுக்கு நிறைவேற்றப்பட்டது. அது 34-1 என்ற பிரேரணை ஊடாக முன்னெடுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டாகும்போது 30-1 என்ற பிரேரணையை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்று தெரிவித்தே 34-1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.
எனினும் 2019 ஆம் ஆண்டுக்குள்ளும் 30-1 என்ற பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படாததன் காரணமாக தற்போது 40-1 என்ற பெயரில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையே தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM