(எம்.ஆர்.எம்.வஸீம்)
புதிய கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலை வெற்றிபெறுவோம் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, அதற்கு தலைமைத்துவம் வழங்க தான் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் அனைத்து முற்போக்கு சக்திகளையும் கூட்டிணைத்துக்கொண்டு புதிய கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலை வெற்றிபெறுவோம். அதற்காக கிராம மட்டத்தில் இருக்கும் நீங்கள் சக்திபெறவேண்டும். பொதுத்தேர்தலுக்கு புதிய மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்த நாங்கள் தயார்.
அதற்காக யாரையும் ஒதுக்கமாட்டோம். அனைவரையும் இணைத்துக்கொண்டே செல்லவேண்டும். புதிய கூட்டணிக்கு தலைமைதாங்க நான் தயார். ஒற்றுமையே எமக்கு பலம். அந்த ஒற்றுமை பெயரளவில் இருக்கமுடியாது.
அதேபோன்று எமது எதிர்த்தரப்புடன் டீல்போட்டுக்கொண்டு செயற்படுபவர்களுடன் இந்த பயணத்தை செல்லமுடியாது. டீல் அரசியல் கட்சிக்கும் நல்லதில்லை, நாட்டுக்கும் நல்லதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று கொழும்பு கண்காட்சி பண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டடார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM