கணவன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் உயிரிழந்த சோகம்

Published By: Digital Desk 4

26 Jan, 2020 | 06:05 PM
image

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது 72 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பத்தில் குடும்பத் தலைவரான ஐயாத்துரை என்பவர் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவியான ஐயாத்துரை சரஸ்வதி என்பவருக்கு  தகவல் வழங்கப்பட்டுள்ளது. தனது கணவன் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குறித்த குடும்ப பெண் மயக்கம் அடைந்துள்ளார்

மயக்கமடைந்து விழுந்த குறித்த குடும்பப் பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த  இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22