ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்பாக சமர்ப்பிக்கப்படும் கைவிரல் அடையாளத்தின் மூலம் உறுதிசெய்வதற்கான ஒழுங்குறுத்தும் திட்டமொன்றை ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கான வசதிகளை ஓய்வூதிய திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொடுக்கும் தனியார் மற்றும் அரச வங்கிக் கிளைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்று ஓய்வூதியத்திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட முதலாவது ஓய்வூதியத்தை பெறும்போது கைவிரல் அடையாள பதிவை மேற்கொண்ட ஓய்வூதியக்காரர்களுக்கு இந்த உறுதியை வழங்குவதற்கு இந்த திட்டத்தின் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கைவிரல் அடையாளத்தின் மூலம் இந்த உறுதியை பெற்றுக் கொள்வதற்கு கடுவெல, ஹோமாகம, மாஹரகம, கெஸ்பாவ, மாவனெல்லை, காலி, கம்பஹா, கண்டி, கடவஸ்சத்தர , மீரிகம, அத்தனகலை, மஹர, களுத்துறை, குருநாகல், கொழும்பு, மினுவாங்கொட, ஜாஎல, தம்புள்ளை, உக்குவெல மற்றும் திம்பிரிக்கஸ்யாய ஆகிய பிரதேச செயலக அலுவலகங்களின் மூலம் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏனைய பிரதேச செயலகங்கள் மூலம் இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஏ.ஜயத்த டீ டயஸ் மேலும் தெரிவித்தார்.
- அரசாங்க தகவல் திணைக்களம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM