சர்ச்சைக்குரிய குரல் பதிவு  விசாரணைகளுக்கு அரசாங்கம் அழுத்தம்  பிரயோகிக்கவில்லை : பந்துல 

Published By: R. Kalaichelvan

26 Jan, 2020 | 03:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய  குரல் பதிவுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும்  குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அரசாங்கம் எவ்வித ஆலோசனைகளையும் வழங்கவில்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் ,உயர்கல்வி அமைச்சர்  பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நீதித்துறையின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விநியோகத்தில  முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளன என்பதை பொதுஜன  பெரமுனவினரே ஆரம்பத்தில் பகிரங்கப்படுத்தினோம்.

தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் முறிகள் கொடுக்கல் வாங்கலில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உரிய தெளிவுப்படுத்தலினை விரைவில்  ஊடங்கள் ஊடாக முன்னெடுப்பார்.

 சமூக  வலைத்தளங்களில் கடந்த  வாரங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பினை பெற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன்  ராமநாயக்கவின்  சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள்   தற்போது  முழு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த குரல் பதிவுகள்  சமூக வலைத்தளங்களில் வெளியாகுவது  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58