(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அரசாங்கம் எவ்வித ஆலோசனைகளையும் வழங்கவில்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் ,உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
நீதித்துறையின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விநியோகத்தில முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளன என்பதை பொதுஜன பெரமுனவினரே ஆரம்பத்தில் பகிரங்கப்படுத்தினோம்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் முறிகள் கொடுக்கல் வாங்கலில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உரிய தெளிவுப்படுத்தலினை விரைவில் ஊடங்கள் ஊடாக முன்னெடுப்பார்.
சமூக வலைத்தளங்களில் கடந்த வாரங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பினை பெற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தற்போது முழு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM