திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று மாலை இலங்கை போக்குவரத்து சபையின் ஆசன முன் பதிவு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் நால்வரை கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று இலங்கை போக்குவரத்து சபையினர் ஆசன முன்பதிவு நிலையத்திற்கு வருகை தந்த பொதுசந்தையில் கடமைபுரியும் சுமேதகம பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நபர் ஆசன முன்பதிவு செய்வதற்கு வழங்கிய 1000 ரூபாய்க்கு சில்லறை இல்லை என தெரிவித்த பதிவாளர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
மேலும் முன்பதிவு செய்வதற்கு வருகை தந்த நபர் மேலும் மூவரை வரவழைத்து பதிவாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த தலைமையக பொலிஸார் ஆசன முன்பதிவு நிலையத்தில் கடைமை செய்த ஊழியர் மீது தாக்குதல் செய்யத் நால்வரை கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் முன்பதிவு செய்வதற்கு வருகை தந்த நபர் தங்கல்ல பிரதேச 31வயது நபர் திருகோணமலை காமினி திசாநாயக்க மாவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அவருடன் இணைந்து தாக்குதல் நடாத்திய நபர்கள் முறையே மகமாயபுர வயது 33,சுமேதகம வயது23,5ம் கட்டை, சுமேதன்சம்புர வயது 49 பிரதேச வாசிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை பதில் நீதிவான் முன்னால் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM