மு.கா, அ.இ.ம.கா போன்ற இன­வாத சிந்­த­னை­யுடைய கட்­சிகள் அரசில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டாது: தயா­சிறி

Published By: J.G.Stephan

26 Jan, 2020 | 12:18 PM
image

எஸ்.வினோத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ரிஷாத் பதி­யு­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் இன­வாத சிந்­த­னை­யுடன் செயற்­ப­டு­வதால் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலின் பின்னர் அமைக்­கப்­படும் அர­சாங்­கத்தில் அக்­கட்­சிகள் இணைத்­துக்­கொள்­ளப்­பட மாட்­டாது. மேலும் தலை­வர்கள் ஊடாக அன்றி நேர­டி­யாக மக்கள் மத்­தியில் சென்று அவர்­க­ளுக்கு சேவை செய்ய அர­சாங்கம் எதிர்ப்­பார்ப்­ப­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார். 

மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பு ஒன்றின் போதே அமைச்சர் இதனை தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ரிஷாத் பதி­யு­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் இன­வாத சிந்­தனை கொண்ட கட்­சி­க­ளாக உள்ளன் அவர்கள் இன­வாத சிந்­த­னை­யு­ட­னேயே தொடர்ந்தும் செயற்­ப­டு­வார்கள் என கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கிய பல கட்­சிகள் கரு­து­கின்­றன. எனவே எதிர்­வரும் பொதுத்­தேர்­தலை தொடர்ந்து அமைக்­கப்­படும் புதிய அர­சாங்­கத்தில் அக்­கட்­சிகள் எவ்­வ­கை­யிலும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.

எனவே தலை­வர்கள் இன்றி நேர­டி­யாக மக்­க­ளுடன் செயற்­ப­டவே நாம் விரும்­பு­கின்றோம். போது­மக்கள் இன­வாத சிந்­தனை கொண்­ட­வர்கள் அல்ல தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எப்­பொ­ழுதும் இன­வா­த­மாக செயற்­பட மாட்­டார்கள் என்றே நான் நம்­பு­கின்றேன்.

இருப்­பினும் மக்­களின் வாக்கை பெறு­வ­தற்­காக இன­வாத அர­சியல் தலை­வர்கள் மக்­க­ளையும் இன­வாத பக்­கத்­திற்கு திசைத்­தி­ருப்­பு­கின்­றனர்.

சிங்கள்,தமிழ் மற்றும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இன­வாத ரீதியில் மக்­களை தம்­வசம் படுத்த முயற்­சிக்­கின்­றனர். 

எனவே மக்கள் புத்­தி­சா­துர்­ய­மாக சிந்­தித்து செயற்­பட வேண்டும். அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்ற வகையில் தமிழ் , முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கும் எதிர்வரும் காலத்தில் மேலும் பல சேவைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33