எஸ்.வினோத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாத சிந்தனையுடன் செயற்படுவதால் எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில் அக்கட்சிகள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் தலைவர்கள் ஊடாக அன்றி நேரடியாக மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்கு சேவை செய்ய அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாத சிந்தனை கொண்ட கட்சிகளாக உள்ளன் அவர்கள் இனவாத சிந்தனையுடனேயே தொடர்ந்தும் செயற்படுவார்கள் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய பல கட்சிகள் கருதுகின்றன. எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலை தொடர்ந்து அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் அக்கட்சிகள் எவ்வகையிலும் இணைத்துக்கொள்ளப்படமாட்டாது.
எனவே தலைவர்கள் இன்றி நேரடியாக மக்களுடன் செயற்படவே நாம் விரும்புகின்றோம். போதுமக்கள் இனவாத சிந்தனை கொண்டவர்கள் அல்ல தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எப்பொழுதும் இனவாதமாக செயற்பட மாட்டார்கள் என்றே நான் நம்புகின்றேன்.
இருப்பினும் மக்களின் வாக்கை பெறுவதற்காக இனவாத அரசியல் தலைவர்கள் மக்களையும் இனவாத பக்கத்திற்கு திசைத்திருப்புகின்றனர்.
சிங்கள்,தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனவாத ரீதியில் மக்களை தம்வசம் படுத்த முயற்சிக்கின்றனர்.
எனவே மக்கள் புத்திசாதுர்யமாக சிந்தித்து செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்ற வகையில் தமிழ் , முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கும் எதிர்வரும் காலத்தில் மேலும் பல சேவைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM