எம்.மனோசித்ரா
தலைமைத்துவம் மற்றும் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் கூடவுள்ள மத்திய செயற்குழுவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு வாக்கெடுப்பின்றி தீர்வினை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் பின் வரிசை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பிலும் நாளைய மத்திய குழுவில் ஆராயப்படவுள்ளது.
இதன் போது குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை மீண்டும் பிரதி தலைவராக நியமிப்பதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருக்கிறார்.
பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ, உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க , பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனை சபையின் அனுமதியுடனேயே ரணில் விக்கிரமசிங்க செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் தொடர்பிலான தெரிவுகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை மீண்டும் பிரதி தலைவராக நியமிப்பதற்கும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
மேலும் முரண்பாடுகள் இன்றி தலைமைத்துவம் குறித்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வருகின்றது என்று முன்னாள் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM