டெங்கு நோய் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் - சி.துரைநாயகம் 

Published By: Digital Desk 4

26 Jan, 2020 | 11:35 AM
image

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதனால் மக்கள் டெங்கு நோய் தொடர்பில் விழிப்புடன் செயற்படுவதோடு டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள பொது இடங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இன்று திருகோணமலையில்  (26) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் காரணமாக சில இறப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் நோய்த்தாக்கத்தின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் வைத்தியர்களும் தாதிமார்களும் வைத்தியசாலையில் நிலவுகின்ற நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

அத்துடன் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக அதனுடன் சார்ந்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றபோதும் பொதுமக்களின் ஒத்துழைப்பு முழமையாக கிடைக்கின்ற பட்சத்திலேயே அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். 

எனவே பொதுமக்கள் தங்களை சூழவுள்ள பகுதிகளை துப்பரவாக பேணுவதோடு டெங்கு நுளம்பு பெருகும் அபாயமுள்ள இடங்கள் தொடர்பில் பிரதேச சபைக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10