இந்தோனேசியாவில் தனது தாயின் வைத்திய செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை தொலைக்காட்சியில் பார்த்தப்படியே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் லிகா தங்தத் என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு 28,000 யூரோ பரிசாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த ஜன்னா என்ற 14 வயது சிறுமி ஒருவர், உயிருக்குப் போராடும் தனது தாயின் வைத்திய செலவுக்காக போட்டியில் பங்கேற்றார். இதில் தாயை நினைத்து உருக்கமாகப் பாடி அனைவரையும் அசத்தினார். அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜன்னா அதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார்.
அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதியான தகவல் மேடையில் அறிவிக்கப்பட்ட போது, இந்த மகிழ்ச்சியான தகவலை தனது தாயிடம் போனில் சொல்ல ஜன்னா விரும்பினார். அப்போது, அவரது பாடலை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே ஜன்னாவின் தாய் உயிரிழந்ததாக அவரது உறவினர் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட அந்தச் சிறுமி மேடையிலேயே கதறி அழுதார். இதனைக் கண்டு அரங்கில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர். நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் இது சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM