எமது மக்களிற்கு எதிரான விடயங்களை இந்த அரசு மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்த அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை மீண்டும் கொண்டு வருவார்களேயானால் சிறுபான்மை மக்களிற்கு எதிரான ஒரு விடயமாக தான் பார்க்கமுடியும். நாம் அரசாங்கத்துடன் இருப்பது எமது மக்களிற்கான அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்காகவே தவிர எமது மக்களை சிறுமை படுத்துவதற்கல்ல. எனவே பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்பதை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஏற்படுத்துவார்களேயானால் இந்த நாட்டை சரியான பாதையிலே முன் கொண்டு செல்ல முடியாது . சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி இன்றைய ஜனாதிபதி வெற்றிபெற்றிருப்பது உண்மை தான். இருந்தாலும் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் சரியாக வாழாமல் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லமுடியாது.
எனவே இந்த அரசாங்கத்தின் நல்ல விடயங்களிற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து அதன் மூலமாக எமது மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். அதேவேளை மக்களிற்கு பிழையான செயற்பாடுகள் எதும் நடந்தால் நிச்சயாமாக ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM