காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

Published By: Daya

25 Jan, 2020 | 12:38 PM
image

புத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 59 வயதான சேகு ரபீக் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த மீனவர் கடந்த வியாழக்கிழமை காலையில் தனது மகனோடு, வழமைபோல மீன் பிடித் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில், புத்தளம் கடலில் தவறுதலாக வீழ்ந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 
தனது தந்தை கடலுக்குள் வீழ்ந்ததை அடுத்து மகன் உடனடியாக தந்தையைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்துள்ளார்.



இந்த சமயத்தில் அவர்களின் இயந்திர படகின் விசிறிகள் அவருக்குக் காயத்தை ஏற்படுத்தியதுடன், அப்படகு தானாகவே இயங்கி அந்த இடத்திலிருந்து தூரமாகிச் சென்றுள்ளது.

இந்நிலையில்,  தனது தந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததனால் மீனவர் ரபீக்கின் மகன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீந்திச் சென்று புத்தளம் கடல் நீர் ஏரியின் அண்டைய பகுதியான மாம்பூரி மீன்பிடிக் கிராமத்தை அடைந்து நடந்த சம்பவங்களை தமது குடும்பத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த மீனவரைத் தேடி அன்றைய தினம் புத்தளத்திலிருந்து 35 படகுகளில் மீனவர்களும், பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.குறித்த மீனவரைத் தேடி புத்தளம் பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும், குறித்த மீனவர் காணாமல் போய் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட மீனவரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பன இடம்பெற்றது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10