தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு - மன்னாரில் சம்பவம்

Published By: Daya

25 Jan, 2020 | 11:22 AM
image

மன்னார் தோட்ட வெளி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த, அற்புதம் நிறைந்த புராதன தேவாலயமாகத்  திகழும் தோட்டவெளி தூய அந்திரேயா அப்போஸ்தலர் தேவாயலத்தில் உண்டியல் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாகத்  தேவாலயத்தின்  நிர்வாகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த தேவாலயத்தின் யன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பெருந் தொகையான பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

நேற்று காலை தேவாலயத்திற்குச் சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டதை அவதானித்து தேவாலயத்தின் நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில்,  ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸார்  சென்று  பார்வையிட்டதுடன்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01