மன்னார் தோட்ட வெளி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த, அற்புதம் நிறைந்த புராதன தேவாலயமாகத் திகழும் தோட்டவெளி தூய அந்திரேயா அப்போஸ்தலர் தேவாயலத்தில் உண்டியல் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தேவாலயத்தின் நிர்வாகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த தேவாலயத்தின் யன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பெருந் தொகையான பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை தேவாலயத்திற்குச் சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டதை அவதானித்து தேவாலயத்தின் நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸார் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM