பஸ்ஸில் மோதி தாயும் மகளும் பலி

Published By: R. Kalaichelvan

24 Jan, 2020 | 07:51 PM
image

(இரா.செல்வராஜா)

அனுராதபுரம் மாபோதி விகாரைக்கு சமய சுற்றுலா மேற்கொண்ட வயோதிப தாய் ஒருவரும் அவரின் மகளும் தாங்கள் பயணித்த பஸ்சினால் மோதுண்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று காலை கித்துல்கல பகுதியில் நடைபெற்றுள்ளது.

தாங்கள் பயணித்த பஸ்ஸிலிருந்து மற்ற பஸ் வண்டிக்கு செல்வதற்காக பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்த போது அவர்கள் பயணித்த பஸ் சடுதியாக முன்னோக்கி நகர்ந்ததால் அவ்விருவரும் பஸ்ஸின் சில்லில் சிக்கியுள்ளனர்.

அவ்விருவரும் மீட்கப்பட்டு கரவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 80 வயது தாயும் 48 வயதான அவரது மகளுமே உயிரிழந்ததாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நிட்டம்புவ ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற வேளையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் நிலைக்குலைந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வேயான்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வாலிபரே உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01