ரஞ்சனிடம் எனது குரல் பதிவுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை :  சபாநாயகர்

Published By: R. Kalaichelvan

24 Jan, 2020 | 05:31 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

ரஞ்சன் ராமநாயக்க இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு ஒப்படைக்கவில்லை என்பதை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். எனது குரல் பதிவுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், ராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா உறுப்பினர் வரப்பிரசாத மீறல் தொடர்பான கூற்றொன்றை முன்வைத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு சமர்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றது.

ஆனால் அவ்வாறு எந்த இறுவட்டுகளும் சமர்பிக்கப்படவில்லை என சபாநாயகரான நீங்கள் அறிவித்திருந்தீர்கள் இதன் உண்மை நிலையை தெளிவுபடுத்தவேண்டும்.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 21ஆம் திகதி சபையில் உரையாறுகையில் பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதுதொடர்பான குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று மறுநாள் 22ஆம் திகதி சபையில் அவர் உரையாற்றுகையில், தன்னிடமிருக்கும் இறுவட்டுகளில் ஒரு தொகுதியை அன்றைய தினம் மாலை வழங்குவதாகவும் பின்னர் மாலை நேரத்தில் அதனை பாராளுமன்ற செயலாளருக்கு வழங்கி அதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

ஆனால் அவர் அந்த இறுவட்டுகளை ஒப்படைக்காமல் மீண்டும் எடுத்துச்சென்றுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருக்கும் இறுவட்டில் உங்களது குரல் பதிவு உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது குரல் பதிவு இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

அதனால் இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு ஒப்படைத்ததாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பற்றுச்சீட்டை, அவர் நீதிமன்றத்துக்கு ஒப்படைத்து இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு ஒப்படைத்ததாக தெரிவிக்க முடியும்.

எனவே இந்த விடயம் தொடர்பாக தெளிவான பதிலொன்றை சபைக்கு தெரிவிக்கவேண்டும் என வினவியதற்கு சபாநாயகர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02