(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
ரஞ்சன் ராமநாயக்க இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு ஒப்படைக்கவில்லை என்பதை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். எனது குரல் பதிவுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், ராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா உறுப்பினர் வரப்பிரசாத மீறல் தொடர்பான கூற்றொன்றை முன்வைத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு சமர்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றது.
ஆனால் அவ்வாறு எந்த இறுவட்டுகளும் சமர்பிக்கப்படவில்லை என சபாநாயகரான நீங்கள் அறிவித்திருந்தீர்கள் இதன் உண்மை நிலையை தெளிவுபடுத்தவேண்டும்.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 21ஆம் திகதி சபையில் உரையாறுகையில் பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதுதொடர்பான குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று மறுநாள் 22ஆம் திகதி சபையில் அவர் உரையாற்றுகையில், தன்னிடமிருக்கும் இறுவட்டுகளில் ஒரு தொகுதியை அன்றைய தினம் மாலை வழங்குவதாகவும் பின்னர் மாலை நேரத்தில் அதனை பாராளுமன்ற செயலாளருக்கு வழங்கி அதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
ஆனால் அவர் அந்த இறுவட்டுகளை ஒப்படைக்காமல் மீண்டும் எடுத்துச்சென்றுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருக்கும் இறுவட்டில் உங்களது குரல் பதிவு உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது குரல் பதிவு இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
அதனால் இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு ஒப்படைத்ததாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பற்றுச்சீட்டை, அவர் நீதிமன்றத்துக்கு ஒப்படைத்து இறுவட்டுகளை பாராளுமன்றத்துக்கு ஒப்படைத்ததாக தெரிவிக்க முடியும்.
எனவே இந்த விடயம் தொடர்பாக தெளிவான பதிலொன்றை சபைக்கு தெரிவிக்கவேண்டும் என வினவியதற்கு சபாநாயகர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM