யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரினால் 38 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு தேடுதல்களை நேற்று இடம்பெற்றது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது இதன் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது 19 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறு குற்றங்களை புரிந்த ஐந்து சந்தேகநபர்கள் என மொத்தமாக 38 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM