(எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர், பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) இன்று சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்தது.
கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசௌகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பெண் ஊழியரான கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், விவகாரத்தில் இடம்பெறும் தொலைபேசி வலையமைப்பு பகுப்பாய்வு சார் விசாரணைகளை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
இன்று காலை 9.30 மணிக்கு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம், மனிதப் படு கொலைகள் குரித்த விசாரணைப் பிரிவில் பிற்பகல் 3.00 மணி வரை விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அவ்விசாரணைகளின் பின்னர் ஷானி அபேசேகர அங்கிருந்து வெளியேறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM