5 மணிநேர விசாரணையின் பின்னர் ஷானி அபேசேகரவிடம் வாக்கு மூலமும் பதிவு!

Published By: Vishnu

23 Jan, 2020 | 09:24 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர், பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) இன்று சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்தது. 

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்  பொய்யான  தகவல்களை வழங்கி தேசத்தை  அசௌகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பெண் ஊழியரான கானியா பனிஸ்டர் பிரான்சிஸ், விவகாரத்தில் இடம்பெறும்  தொலைபேசி வலையமைப்பு பகுப்பாய்வு சார் விசாரணைகளை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்றன.  

இன்று காலை 9.30 மணிக்கு  கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம், மனிதப் படு கொலைகள் குரித்த விசாரணைப் பிரிவில் பிற்பகல் 3.00 மணி வரை விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

அவ்விசாரணைகளின் பின்னர் ஷானி அபேசேகர அங்கிருந்து வெளியேறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58