வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று உள்ளூராட்சி அமைச்சும் அதன்கீழான திணைக்களங்களுக்குமான துறைசார் கூட்டம் வடக்குமாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா , உள்ளுராட்சி , மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி , வீதி அபிவிருத்தி , மோட்டார் போக்குவரத்து, மற்றும் போக்குவரத்து அமைச்சக பணிப்பாளர்கள் , செயலாளர்கள், துணைத்தலைவர்கள், உயரதிகாரிகள், துறைசார்ந்த அதிகாரிகள், இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அபிவிருத்தி செயற்த்திட்டங்கள் வருவதற்கு முன்னேரே சகல திணைக்களங்களும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் திணைக்களங்களின் தயார்ப்படுத்தலில் உள்ள தாமதங்களால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வடக்குமாகாணம் இழப்பதே வாடிக்கையாகிவிட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பது தொடர்பில், விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான, திட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, புனரமைப்பு பணிகளை விரைவாக்குமாறு, அதிகாரிகளுக்கு, வடக்குமாகாண ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
வடக்குமாகாணத்தில், பொருத்தமான இடங்களில் ஓய்வெடுக்கக்கூடிய, அல்லது தரித்துநின்று இளைப்பாற, மலசலகூட வசதிகளுடனும், குடிநீர் வசதிகளுடனும், வாகன தரிப்பிடங்களை அமைக்குமாறும் ,ஆளுநர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து இன்று மாலை அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு சென்ற வடக்குமாகாண ஆளுநர் அங்கிருக்கும் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
கைத்தொழில் பேட்டைக்கு சொந்தமான இடங்களில் புதிதாக முன்னெடுக்கக்கூடிய தொழில் முயற்சியாளர்களைக் கவரக்கூடிய வகையில் பரிந்துரை திட்ட வரைபுகளையும் ஏனைய விபரங்களையும் விரைவாக சமர்பிக்கும்படியும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் .
இந்த விஜயத்தின்போதும் ஆளுநரின் செயலாளர் இணைப்புச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளரும் கௌரவ வடக்கு மாகாண ஆளுநருடன் இருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM