ஸ்பெயின் - கேட்டலோனியா கடற்கரை பகுதியிலுள்ள நகரம் இடுப்பளவிற்கு கடல் நுரையால் சூழப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் - குளோரியா புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக அங்கு மழை, பனி, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள நகரங்களில் சூறைக்காற்று சுழன்றடித்தது வருகிறது.
இந்த புயல் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போய் உள்ளனர் இந்நிலையில், வீடுகளும் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. அத்துடன் 30 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனபடுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் கேட்டலோனியா பிராந்தியத்தில், கடற்கரையை ஒட்டியுள்ள டாசா டெல் மார் நகரில் சூறைக்காற்று காரணமாக வீதிகள் முழுவதும் கடல் நுரையால் சூழப்பட்டுள்ளது. மழை வெள்ளம் போன்று கடல் நுரை சூழ்ந்ததால், பொதுமக்கள் தெருவில் இறங்கிச் செல்ல முடியாத நிலை ஏற் பட்டது.
கடல் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றத்தினால் உருவாகும் இந்த நுரை, பொதுவாகப் பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆனால், தற்போதுள்ள நுரையில் உள்ள பாசியின் அளவைப் பொருத்து, அவை காற்றில் பரவும் நச்சுகளை வெளியிடலாம் என்பதால், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படும் என அமெரிக்கத் தேசிய பெருங்கடல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM