மணல் ஏற்றிய வாகனம் குடை சாய்ந்ததில் சாரதி பலி

Published By: Priyatharshan

10 Jun, 2016 | 10:03 AM
image

அக்குறணை பிரதேசத்தில் ஆற்றுமணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று குடை சாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றப்பயன் படுத்தப்படும் ‘லோடர்’ என்ற சுமை ஏற்றி ஒன்றே இவ்வாறு தடம் புறண்டுள்ளது. அது தடம் புறண்டதில் சாரதி கடும் காயங்களுக்கு உள்ளாகி அக்குறணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை கண்டி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்பிரமணியம் மேற்கொண்டார்.

 

தலை மற்றும் உடலின் பலபாகங்களிலும் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக அதிகளவான குருதிப் பெருக்கம் ஏற்பட்டு இம்மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை பின்னர் அவர் சாட்சியமளித்தார்.

இதையடுத்து விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21