குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்

Published By: Daya

23 Jan, 2020 | 12:46 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளைப் பாராளுமன்றத்திடம் கையளிக்கவில்லை எனப் பிரதி சபா நாயகர் ஆனந்த குமாரசிறி இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில்  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாவது,

எனக்கு இரண்டு தினங்கள் நீதிமன்றத்தில் இருந்து பிணை வழங்கியிருந்தால் என்னிடமிருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்னுடைய குரல் பதிவுகளையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது என்னுடைய வீட்டில் இருந்து பொலிஸாரினால் ஹாட்டிஸ்க் ஒன்று, மடிக்கணனி ஒன்று மற்றும் எனது 4 கையடக்க தொலைபேசிகள் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன.

தற்போது நான் சிறைக்காவலில் இருக்கின்றேன். எனது குரல் பதிவுகள் வங்கியொன்றின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை மீள் பதிவு செய்துகொள்ள முடியாமல் இருக்கின்றது என அவர் தெரிவித்தை அடுத்தே தனது குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளைப் பாராளுமன்றத்திடம் கையளிக்கவில்லை எனப் பிரதி சபா நாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41