கொரனாவைரஸ் காரணமாக அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கருதப்படும் வுகான் நகரத்திலிருந்து மக்கள்வெளியேறுவதற்கு சீனா உடனடி தடை விதித்துள்ளது.
11 மில்லியனிற்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்த நகரத்திலிருந் எவரும் வேறு பகுதிகளிற்கு செல்லக்கூடாது என சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வைரஸ் தாக்கம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சீன அதிகாரிகள் அந்த நகரை இழுத்து மூடியுள்ளனர்.
இன்று முதல் வுகான் நகரத்திலிருந்து ஏனைய பகுதிகளிற்கு செல்வதற்கான அனைத்து போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்படுவதாக சீனா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பேருந்து புகையிர படகுச்சேவைகளையும் நிறுத்திவைக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக வுகான் நகரில் விசேட மத்திய நிலையமொன்றை அமைத்துள்ள அதிகாரிகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்காக இந்த நிலையத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
வுகான் நகரில் உள்ள மக்களை பொதுமக்கள் அதிகமாக காணப்படும் இடங்களிற்கு செல்லவேண்டாம்,என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்குமாறும் சீனா அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹோட்டல்களையும் சுற்றுலாப்பயணிகளிற்கான இடங்களையும் பெருமளவில் மக்கள் கூடுவதற்கான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு சீன அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை நூலகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை தங்கள் பொது நிகழ்வுகளை நிறுத்திக்கொண்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM