என்னை வன்புணர்வதற்கு முயற்சித்த அவரை இரும்புக் கம்பியால் தாக்கினேன் அவர் இறந்துவிட்டார் - பாதிக்கப்பட்ட  பெண் வாக்குமூலம்

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 09:59 PM
image

கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

மிருசுவில் படித்தமகளிர் திட்டம் பகுதியில் கோவில்களில் தொண்டு செய்து கொண்டு தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

ரத்தினம் குகேந்திரன் (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் அவரது சடலத்தில் காணப்பட்டன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றை கண்டறிந்தனர். அந்த வீட்டில் வசித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

“நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்த அவர் என்னை வன்புணர்வதற்கு முயற்சித்தார். அதனால் என்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கினேன். அவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று வீதியில் போட்டேன்” என்று அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபரைத் தாக்கிய கம்பியை தண்ணீரால் கழுவி வைத்ததுடன், வீட்டையும் கழுவி சந்தேகநபர் சுத்தப்படுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார். கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43