ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை  - கெஹலிய 

Published By: Vishnu

22 Jan, 2020 | 05:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய  நாடுகள் மனித  உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான  தீர்மானங்களில்  2015 ஆம் ஆண்டில் இருந்து  ராஜபக்ஷர்கள் இருந்த  நிலைப்பாட்டில் தற்போது எவ்வித மாற்றங்களும் கிடையாது எனத் தெரிவித்த அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல,  சர்வதேசத்தில் எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான தீர்மானங்களுக்கு ஒருபோதும் அங்கிகாரம் வழங்க முடியாது என்றும் கூறினார்.

ஐக்கிய   நாடுகள் மனித  உரிமை   பேரவையின் 40 ஆவது   கூட்டத்தொடர்  கடந்த வருடம்  பெப்ரவரி மாதம் 25 ஆம்  திகதி இடம் பெற்றது. 

இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில்  புதிய பிரேரணை  கொண்டு வந்து அதனூடாக இலங்கையின்  நல்லிணக்கம்  மற்றும் பொறுப்புக்குகூறலை ஊக்குவித்தல் தொடர்பில்  கவனம் செலுத்த வேண்டும் எனவும் இணையனுசரனை  வழங்கிய  நாடுகள் குறிப்பிட்டன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவையின்  41 ஆவது கூட்டத்தொடர்  ஆரம்பமாகவுள்ளது.  இம்முறை இலங்கை தொடர்பிலும், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் புலம் பெயர் அமைப்புக்கள் பல அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாகவும் அறிய முடிந்தள்ளது.  

நல்லாட்சி அரசாங்கம்  அடிப்படை காரணிகள் ஏதுமின்றி  2015ம் ஆண்டு  30( 1) பிரேரணைக்கு இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தமை  முதல் தவறாகும். 

இத்தீர்மானத்திற்கு அப்போதை  வெளிவிவகார  அமைச்சர் பதவி வகித்த மங்கள சமரவீ  ஜனாதிபதி மற்றும்  பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமலும், அனுமதி பெறாமலும் தான்தோன்றித்தனமான தீர்மானங்களையே  மேற்கொண்டார்.

நாட்டுக்கு எதிரான   தீர்மானங்கள் வெற்றிப்பெறுவதற்கும், அதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கும் ஒருபோதும்  இடமளிக்கவோ, ஆதரவு  வழங்கவோ முடியாது என  2015ம் ஆண்டில் இருந்து  எதிர்க்கட்சியினர் என்ற அடிப்படையில் கடுமையான எதிர்ப்பினை  தெரிவித்தோம்.  இன்று  ஆளும்  தரப்பினராக   செயற்படும் போது எமது நிலைப்பாட்டில்  எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04