(எம்.மனோசித்ரா)
கால் நடைகள் ஒரு வித நோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதால் பசும் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அத்தோடு கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தாம் கொள்வனவு செய்யும் தொகையை விடவும் அதிக விலைக்கு பாவனையாளர்களிடம் விற்பனை செய்கின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அகில இலங்கை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
இன்று நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தனவை சந்திப்பதற்கு நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் முகாமைத்துவ அமைச்சிற்கு சென்றிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதே வேளை அமைச்சர் தம்முடனான சந்திப்பிற்கு நேரத்தை ஒதுக்கியதாக அறிவித்த போதிலும் பின்னர் சந்திப்பு புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தனவை சந்திப்பதற்கு நேரம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் வழங்கிய நேரத்தில் அவர் எம்மை சந்திக்கவில்லை. சந்திப்பிற்கு நேரத்தை வழங்கிவிட்டு ஒழுக்கமற்று செயற்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது இவ்வாறான முறையில் தானா? பால் விற்பனையாளர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். சுமார் ஒரு இலட்சம் கால்நடைகள் நோய் தாக்கமொன்றுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் நூற்றுக்கு நாற்பது வீதம் பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
இதே போன்று கோழி இறைச்சி உற்பத்தியாளர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். அதாவது கோழி இறைச்சி உற்பத்தியாளர்களிடம் இறைச்சி கிலோ ஒன்றை 200 ரூபாவுக்கு வாங்கும் விற்பனையாளர்கள் பாவனையாளருக்கு 500 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.
மாதாந்தம் ஒரு இலட்சம் கிலோவுக்கும் அதிகமாக கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படுகின்றது. தேவைக்கு அதிகமான உற்பத்தி இடம்பெற்றாலும் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இவை தொடர்பில் உடனடியாக அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டியிருக்கிறது. அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM