வவுனியாவில் குப்பை மேட்டினை எதிர்த்து தொடரும் மக்கள் போராட்டம்

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 02:16 PM
image

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கோரி, பிரதேச இஸ்லாமிய மக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு உழவியந்திரங்கள், லொறிகள் மூலம் கொண்டு வந்து பாதுகாப்பற்ற முறையில் வீசுவதுடன், தீ மூட்டுவதால் வெளியாகும் கருமையான புகையினால், பல்வேறு சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மழை காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரிலிருந்து வாகனங்களில் கொண்டுவரும் கழிவுகளை உள்ளே, அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப்போவதாகவும் தெரிவித்தனர்.

கடந்தவருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது. தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்பாட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது. தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்பாட்டம் இன்று மீண்டும் இடம்பெற்று வருகின்றது.

போராட்ட இடத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் தலைவர்,  பிரதேச செயலாளர், பொலிஸார் உட்பட பலரும் வருகை தந்து பிரச்சினையை சுமூகமாக்க முயன்றும் முடியாத நிலையில் தற்போதும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09