(எம். எப்.எம். பஸீர்)
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு, குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்ர் பிரான்சிஸ் தொடர்பிலான விசாரணைகள் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்திய பிறிதொரு கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சனின் கீழ் மனித படுகொலைகள் தொடர்பான விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சத் முனசிங்க, பொலிஸ் பரிசோதகர் .இக்பால் உள்ளிட்டோர் கொழும்பு பிரதான நீதிவான லங்கா ஜயரத்னவிற்கு மேலதிக விசாரணை அறிக்கையொன்றின் ஊடாக இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
கானியா பெனிஸ்டர் விவகாரம் குறித்த வழக்கு விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது தற்போது சுவிட்ஸர்லாந்துக்கு அடைக்கலம் தேடிச்சென்றுள்ள சி. ஐ. டியின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவிற்கு கடந்த 2019 நவம்பர் 19ஆம் திகதி இந்த விவகாரத்தின் சந்தேக நபரான சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரன்சிஸ் ஆறு தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சி.ஐ. டி தனது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட மேலதிக விடயங்களை விசேட மேலதிக அறிக்கை ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்தது.
' சந்தேக நபரான கானியா பெனிஸ்டர் என்பவர் பயன்படுத்திய தொலைபேசி சிம் அட்டை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன. அந்த சிம் அட்டையானது லக்னா தரிந்து பரனமான்ன என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த நபர் தற்போது ஒஜோன் பிரேன்ஸ் பசே எனும் தனியார் ஊடக நிறுவனமொன்றில் சேவையாற்றுகின்றார். அவரை சி.ஐ.டி.க்கு அழைத்து விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வாக்குமூலத்தில் தனது பெயரில் பெற்றுக் கொண்ட குறித்த சிம் அட்டையை கடந்த 2011ஆம் ஆண்டு சிலோன் டுடே பத்திரிகையில் கடமையாற்றிய தரிஷா பெஸ்டியன் என்பவருக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகும் போது தரிஷா பெஸ்டியன் சன்டே ஒப்ஸவர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார்.
இதனையடுத்து தரிஷா பெஸ்டியனின் தொலைபேசி அழைப்பு விபர பட்டியல் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இதன்போது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய ஊடகவியலாளர் கிரிஷாந்த குரேவின் தொலைபேசி இலக்கத்திற்கு தரிஸாவால் 21 அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 2019 நவம்பர் 19ஆம் திகதி தற்போது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் தொலைபேசி இலக்கத்திற்கு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரிஸாந்த குரே அழைப்பொன்றெ ஏற்படுத்தியுள்ளதுடன் அந்த அழைப்பானது 9 நிமிடங்கள் 12 வினாடிகள் வரை நீடித்துள்ளன.
அதே வேளை தற்போது வெளிநட்டில் உள்ள சி.ஐ. டியின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா சுவிட்ஸர்லாந்துக்கு செல்ல முன்னைய தினம் இரவு 9.30 ற்கு முன்னாள் சி. ஐ. டி பணிப்பாளர் ஷானி அபேசேரவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். இதே வேளை லக்னா தரிந்து பரனமான்ன என்பவர் சி. ஐ. டி க்கு அளித்துள்ள வாக்குமூலத்தின் பிரகாரம் சண்டே ஒப்ஸேவர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தரிஷா பெஸ்டியன் கடந்த 2019 டிசெம்பர் 22ஆம் திகதி சுவிட்ஸர்லாந்துக்கு பயணமாகியுள்ளதாகவும், தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவர் தொரிவித்தார். எவ்வாறாயினும் தரிஷா பெஸ்டியனுக்கு இறுதியாக உள்வந்த அழைப்பு டிசெம்பர் 22ஆம் திகதி பிற்பகல் 02. 36க்கு இவ்வழக்கின் சந்தேக நபரான கானியா பெனிஸ்டர் என்பவரினால் எடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பானது 108 செக்கன்கள் நீடித்தன.
இந்நிலையில் லேக் ஹவுஸ்' முன்னாள் தலைவர் கிரிஸாந்த குரேவும் கடந்த டிசம்பவர் 25ஆம் திகதி மலேசியாவுக்கு வெளியேறி சென்றுள்ளதாக குடிவரவு , குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிடம் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துக் கொள்ள அவரை நாளை 23ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆஜராக பொரளை பொலிஸார் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது ' என சி. ஐ. டி இந்த விவகாரத்தின் விசாரணை நிலைமை தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவை தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சுவிஸ் தூதகரத்தின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிசின் தொலைபேசி நீதிமன்ற பொறுப்பில் இருந்த நிலையில் அதனை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற கொழும்பு பிரதான நீதவான லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்தார்.
முன்னைய வழக்கு தவணையின் போது கானியா சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெரும குறித்த தொலைபேசியில் தூதகரத்தின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் தகவல்கள் அடங்கியுள்ளதால் அந்த தொலைபேசி 1996ஆம் ஆண்டின் 9ம் இலக்க தூதரக சிறப்புரிமை சட்டத்தின் 38(2) அத்தியாயத்தின் கீழ் பாதுகாப்பு பெறுவதாக வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த தொலைபேசியை பகுப்பாய்வுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என கானியாவின் சட்டத்தரணி வாதம் முன்வைத்திருந்தார்.
எனினும் அந்த வாதத்தை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று தொலைபேசியை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப உத்தரவிட்டார். ' சந்தேக நபரின் தொலைப்பேசி அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை. அத்துடன் அது தூதரகத்தினால் வழங்கப்படவுமில்லை. எனவே அந்த தொலைபேசியை பகுப்பாய்வு செய்ய 1996ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தூதரக சிறப்புரிமை சட்டத்தின் 38(2) அத்தியாயத்தின் கீழ் எத்தடைகளும் உள்ளதாக தோன்றவில்லை. எனவே சந்தேக நபர் தரப்பின் வாதத்தை நிராகரிக்கின்றேன். தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் அதன் அறிக்கையை சட்டமாதிபருக்கு கையளிக்கவும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிடுகின்றேன்.' என நீதிவான் லங்கா ஜயரத்ன அறிவித்தார்.
நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைகளின் போது விசாரணையாளர்களான சி . ஐ. டி யினருடன் சிரேஷ்ட அரச சட்டவாதிகளான ஜனக பண்டார , லக்மினி கிரியாகம , ஆகியோர் ஆஜரானதுடன் சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெரும முன்னிலையானார். வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM