அமெரிக்காவில் நியூஜெர்சியில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து முழுக் குடும்பத்தையும் காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் தீ பாதுகாப்புமுறைபற்றிக் கற்றுக்கொண்ட 6 வயதான சிறுமியே தனது பெற்றோரையும் தனது சகோதரனையும் அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்.
நியூ ஜெர்சியிலுள்ள குறித்த சிறுமியின் வீட்டின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது 6 வயதான சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறக்கத்திலிருந்துள்ளனர்.
அப்போது உறக்கத்தில் இருந்த சிறுமி புகை வாசனை, மற்றும் தீச்சுவாலையின் சத்தத்தை கேட்டு எழுந்தாள். தீ பற்றியெரிவதாக சத்தமிட்டாள்.
சிறுமியின் தந்தை மகள் தீ எரிவதாக சத்தமிடுவதை கேட்டு ஓடி வந்த போது வீடு புகை நிரம்பியிருத்துள்ளது. அதையடுத்து விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சமையலறை மற்றும் சாப்பாட்டு அறையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீ பரவியதையடுத்து விரைவாக செயற்பட்ட 6 வயது சிறுமிக்கு குடும்பத்தினர் நன்றி செலுத்துயுள்ளனர்.
இதேவேளை, குறித்த சிறுமியின் தந்தை சுமார் 17 ஆண்டுகளாக தீயணைப்பு வீரராக பணியாற்றிவருகின்றார்.
இந்நிலையில், "அவள் எங்கள் உயிரைக் காப்பாற்றினாள், அவள் இல்லாவிட்டால் நான் இன்று உயிருடன் இருக்க மாட்டேன்" என்று சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM