மன்னாரில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான வெள்ளாங்குளம் "சேவா" கிராமத்தில் வெள்ளம்,வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2012 ஆண்டு யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் விதவைகள், புணர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளை உள்ளடக்கி விசேடமாக உருவாக்கப்பட்ட குறித்த கிராமத்தில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் தற்போது வரை அடிப்படை வசதி இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் அதிகம் தேவையுடைய மக்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல் கட்ட நிவாரண பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையளிக்கப்பட்டது.
குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி புராதனி மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM