நேபாளத்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 8 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் நேபாளத்திற்குச் சென்று எவரெஸ்ட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கதவு, யன்னல்கள் என அனைத்தையும் இறுக்கமாக மூடிவிட்டு அவர்கள் குளிர் காய்வதற்காக எரிவாயு சூடாக்கியை (கேஸ் ஹீட்டரை) பயன்படுத்திய போது போதிய காற்றோட்டம் இல்லாமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை இந்தியா கொண்டுசெல்ல நேபாளத்திற்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM