விடுதியில் வாயு கசிவு: 8 இந்தியர்கள் பலி - நேபாளத்தில் சம்பவம்

Published By: Daya

22 Jan, 2020 | 10:03 AM
image

நேபாளத்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 8 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் நேபாளத்திற்குச் சென்று  எவரெஸ்ட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கதவு, யன்னல்கள் என அனைத்தையும் இறுக்கமாக மூடிவிட்டு  அவர்கள்  குளிர் காய்வதற்காக எரிவாயு சூடாக்கியை  (கேஸ் ஹீட்டரை) பயன்படுத்திய போது போதிய காற்றோட்டம் இல்லாமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை இந்தியா கொண்டுசெல்ல நேபாளத்திற்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52