நுகர்வுக்குப் பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது வழங்கு தாக்குதல் தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால் நேற்று திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
நகரத்திற்குச் செல்லும் மக்களின் நலன் கருதியே இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.மக்களுக்குச் சுத்தமான சுகாதாரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டது.
50 மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் சோதனையிடப்பட்டதுடன் குறைபாடுகளுடைய வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன் போது பல வியாபார நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த, மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
உணவகங்களில் சமைப்பவர்கள், பேக்கரி தின்பண்டங்கள் தயார் செய்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளைத் தயாரிக்க வேண்டுமெனவும் உணவு தயாரிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகள் உரிய ஆடைகள் அணிய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன.
இதன்போது, 08 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத்தாக்குதல் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சில வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சோதனை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டதுடன், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM