பம்பைமடு குப்பைமேடு விவகாரம் : தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

Published By: R. Kalaichelvan

22 Jan, 2020 | 11:33 AM
image

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கோரி, பிரதேச இஸ்லாமிய மக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு லாரிகள்,உழவியந்திரங்கள் மூலம் கொண்டு வந்து பாதுகாப்பற்ற முறையில் வீசுவதுடன், தீ மூட்டுவதால் வெளியாகும் கருமையான புகையினால், பல்வேறு சுவாச பிரச்சினைகள் மற்றும் மழை காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரிலிருந்து வாகனங்களில் கொண்டுவரும் கழிவுகளை உள்ளே, அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கும் அவர்கள், தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப்போவதாகவும் தெரிவித்தனர்.

கடந்தவருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது. தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்பாட்டம் இன்று மீண்டும்ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில்  பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06