மட்டக்களப்பில் திறக்கப்பட்ட ஒ. எம்.பி அலுவலகத்திற்கு ஏதிராக இன்று (21) செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. கட்டிடத்திலிருந்து பகல் 1 மணிக்கு ஆரம்பமாகி லொயிஸ் அவனியூர்; ஊடாக நகர மணிக்கூட்டு கோபுரம் வழியாக மத்திய வீதியில் உள்ள ஒ. எம்.பி அலுவலகம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காணாமல் போன உறவுகள் கலந்து கொண்டு .வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஜந்து பேரின் விபரங்களை ஒப்புதலுடன் பெற்றுக் கொண்ட ஓ.எம்.பி ஆறு மாதம் கடந்தும் அதற்கு நிதிவழங்க முடியாத நீ மாவட்டம் தோறும் அலுவலகம் திறந்து எதைச் சாதிக்கப்பாhர்க்கிறாய்.
வெள்ளை வேனில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே , நீ கொன்றாயா, சர்வதேச விசாரணை வேண்டும், 6 ஆயிரம் ரூபா தேவையில்லை , புதிதாக திருட்டுத்தனமாக திறக்கப்பட்ட ஒ.எம்.பி அலுவலகம் தேவையில்லை, போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக ஓ.எம்.பி அலுவலகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டகார்கள் ஆர்ப்பாட்டத்தில் சில மணி நேரம் ஈடுபட்டு பின் அங்கிருந்து விலகிச் சென்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM