திருகோணமலையில் வீடு புகுந்து திருடிய நபருக்கு 6 மாதம் கடூழிய சிறை

Published By: Digital Desk 4

21 Jan, 2020 | 02:11 PM
image

திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான பொருட்களை திருடிய நபர் ஒருவருக்கு ஆறு மாதம் கட்டாய கடூழிய சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிபதி விசானி தேனவது இன்று(21) உத்திரவிட்டார்.

வான் எல, ஜயந்திபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்த   ஒருவருக்கே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கந்தளாயில் வீடொன்றினுள் புகுந்து வீட்டின் பெறுமதியான இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியதாக பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரை குறித்த வழக்கில் குற்றவாளியாக இனங்கண்டு இன்றைய தினம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

குறித்த நபருக்கெதிராக திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு வழக்குகள் கந்தளாய் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08