இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பாடசாலை மாணவர்கள் 2,020 பேர், அஞ்சல் அட்டைகளில் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற வாசகங்கள் எழுதி இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்க்கு அனுப்பும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் திருத்தணியில் உள்ள தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பாடசாலையில், வரும் 24 ஆம் திகதி கொண்டாடப்படும், இந்திய தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உலக சாதனை படைக்கும் முயற்சி நடந்தது.
இதற்காக, பாடசாலை வளாகத்தில் 2,020 மாணவர்கள் ‘வீ சப்போர்ட் சைல்ட் ரைட்ஸ்' என்ற ஆங்கில வார்த்தை வடிவில் அமர வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஆளுக்கு ஒரு அஞ்சல் அட்டையில், 'குழந்தைகள் உரிமைகளை காப்போம்; பெண் குழந்தை திருமணத்தை தடுப்போம்; பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற வாசகங்களை எழுதியுள்ளனர்.
இந்த 2,020 அஞ்சல் அட்டைகளையும், ஜனாதிபதிக்கு அனுப்பி 'ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டு' சாதனையில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில் பங்கேற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM