லெபனானில் தொடரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மோதல்கள் : பலர் காயம்

Published By: Digital Desk 3

21 Jan, 2020 | 11:56 AM
image

லெப­னா­னிய தலை­நகர் பெய்­ரூட்டில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரண்­டா­வது  இர­வாக  இடம்­பெற்ற அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தின்போது கலகத் தடுப்­பு பொலி­ஸா­ருக்கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கு­மி­டையே உக்­கிர மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பொலிஸார் மீது கற்­க­ளையும் ஏனைய பொருட்­க­ளையும் வீசித் தாக்­குதல் நடத்­திய அதே­ச­மயம் பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கலைக்க கண்­ணீர்ப்­புகை, தண்­ணீர்ப் பிர­யோ­கங்­களை மேற்­கொண்­டுள்­ளனர். அத்துடன் இறப்பர் துப்­பாக்கி ரவைப் பிர­யோ­கமும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மேற்­படி மோதல்­களில் குறைந்­தது 145 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.  அவர்களில் சுமார் 45 பேர் வைத்தியசாலையில் சிகிச் சை பெற வேண்­டிய நிலைக்­குள்­ளா­கி­யி­ருந்­தனர்.

அதேசமயம் உள்­நாட்டு தொலைக்­காட்சி ஊட­க­மான அல் ஜடீட்டைச் சேர்ந்த புகைப்­படக் கலைஞர் ஒருவர் உட்­பட இரு ஊட­க­வி­ய­லா­ள­ர்கள் பொலி­ஸாரின் இறப்பர் துப்­பாக்கி ரவைப் பிர­யோ­கத்தில் காய­ம­டைந்­துள்­ள­தாக  அந்­நா­ட்டு அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் தேசிய செய்தி முகவர் நிலையம் கூறு­கி­றது.

அதே­ச­மயம் அந்­ந­கரில்  அன்­றைய தினமும் முதல் நாள் சனிக்­கி­ழ­மையும் இடம்­பெற்ற மோதல்­களில் 530 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக செஞ்­சி­லுவைச் சங்கம் தெரி­விக்­கி­றது.

பாரா­ளு­மன்­றத்­துக்கு அரு­கி­லுள்ள வீதி யில்  நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்ற மோதல்­களின்போது பொலிஸார் மேற்­கொண்ட கண்­ணீர்ப்­புகைப் பிர­யோ­கத்தால் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அங்­கி­ருந்து பின்­வாங்கிச் சென்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்­நாட்டில் தோன்­றி­யுள்ள பொரு­ளா­ தார நெருக்­க­டி­க­ளுக்குக் கார­ண­மான அர­சி யல் வகுப்­பி­னரை பத­வி­யி­லி­ருந்து

வெளியேற்ற வலி­யு­றுத்தி  அனைத்து மதப் பின்­ன­ணி­களைக்கொண்ட பிர­ஜை­களும் கடந்த வருடம்  ஒக்­டோபர் 17ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் அந்­நாட்டு ஜனா­தி­பதி  இந்த விவ­காரம் குறித்து தீர்­மானம் எடுக்க அவ­சர பாது­காப்புக் கூட்­ட­மொன்றை நேற்று திங்­கட்­கி­ழமை கூட்டி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

நாடு நிதி நெருக்­க­டியில் சிக்­கி­யுள்ள நிலையில் அந்­நாட்டு அர­சியல் தலை­மைத்­துவம் அர­சாங்­க­மொன்றை ஸ்தாபிக்கத் தவ­றி­யுள்­ளமை குறித்து  ஆர்ப்­பாட்­டக்­கா ரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றனர்.

 கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பதவியிலிருந்து விலகிய பிரதமர் சாத் ஹரிரி தெரிவிக்கையில்,  நேரத்தை வீணடிப்பதை அனைத்து அரசியல் கட்சி களும் நிறுத்தி அரசாங்கமொன்றை ஸ்தா பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52