லெபனானிய தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது இரவாக இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது கலகத் தடுப்பு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களையும் ஏனைய பொருட்களையும் வீசித் தாக்குதல் நடத்திய அதேசமயம் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை, தண்ணீர்ப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இறப்பர் துப்பாக்கி ரவைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி மோதல்களில் குறைந்தது 145 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 45 பேர் வைத்தியசாலையில் சிகிச் சை பெற வேண்டிய நிலைக்குள்ளாகியிருந்தனர்.
அதேசமயம் உள்நாட்டு தொலைக்காட்சி ஊடகமான அல் ஜடீட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் உட்பட இரு ஊடகவியலாளர்கள் பொலிஸாரின் இறப்பர் துப்பாக்கி ரவைப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் தேசிய செய்தி முகவர் நிலையம் கூறுகிறது.
அதேசமயம் அந்நகரில் அன்றைய தினமும் முதல் நாள் சனிக்கிழமையும் இடம்பெற்ற மோதல்களில் 530 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது.
பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள வீதி யில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதல்களின்போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் தோன்றியுள்ள பொருளா தார நெருக்கடிகளுக்குக் காரணமான அரசி யல் வகுப்பினரை பதவியிலிருந்து
வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து மதப் பின்னணிகளைக்கொண்ட பிரஜைகளும் கடந்த வருடம் ஒக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்து தீர்மானம் எடுக்க அவசர பாதுகாப்புக் கூட்டமொன்றை நேற்று திங்கட்கிழமை கூட்டி கலந்துரையாடியுள்ளார்.
நாடு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு அரசியல் தலைமைத்துவம் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கத் தவறியுள்ளமை குறித்து ஆர்ப்பாட்டக்கா ரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பதவியிலிருந்து விலகிய பிரதமர் சாத் ஹரிரி தெரிவிக்கையில், நேரத்தை வீணடிப்பதை அனைத்து அரசியல் கட்சி களும் நிறுத்தி அரசாங்கமொன்றை ஸ்தா பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM