(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு பாரிய பிளவை ஏற்படுத்தும் நிலையில் இருக்கின்றது. அத்துடன் சஜித் பிரேமதாச கட்சியின் கொள்கையை மாற்றியமைக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார். என்றாலும் கட்சியின் ஆரம்ப உறுப்பினர்கள் அதற்கு இடமளிக்கப்போவதில்லை.
அவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு புதிய கட்சியொன்றை உருவாக்குவது தவிர வேறு வழியில்லாமல்போகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட் டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக் கும் தலைமைப்பதவி போட்டி கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றிருக்கின்றது. இந்த பிரச்சினையானது ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கிடையில் இருக்கும் பிரச்சினையல்ல. கட்சியின் கொள்கையை மாற்றியமைக்கவேண்டும் என்று சஜித் பிரேமதாச மற்றும் அவரை சார்ந்தவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதனை சஜித் பிரேமதாச வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் அவரின் பேச்சுக்களில் விளங்கிக்கொள்ளலாம்.
ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பம் முதல் மேலாதிக்கவாதிகளின் கொள்கையுடன் செயற்பட்டுவரும் கட்சியாகும். அதனால் அதன் கொள்கையை மாற்றியமைக்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆரம்பகால அங்கத்தவர்கள் இடமளிக்கமாட்டார்கள்.
அப்படியானால் சஜித் பிரேமதாச புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவேண்டிவரும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் மேலாதிக்கவாதிகள் கட்சியை முன் கொண்டு செல்ல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மோதல் மிகவிரைவில் பாரியதொரு வெடிப்புடன் இரண்டாக பிளவுபடும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
தேர்தலில் பெரும்பான்மையை பெற்று 19 ஆம் திருத்தத்தை மாற்றியமைக்கவேண்டும் என அரசாங்கத்தில் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
எம்மை பொறுத்தவரை 19 ஆம் திருத்தத்தைவிட தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அமு லில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையால் மக்க ளுக்கு அநீதியே ஏற்பட்டு வருகின்றது. அதனால் தொகுதிவாரி, விகிதாசர முறைமையில் அமைந்த கலப்பு தேர்தல் முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM